Thursday, 25 June 2015

manivasakar

வைகை  நதிக்கு  ஒரு  தனி  பெருமை  உண்டு . எல்லா  நதிகளையும்  போல்  அது  கடலிலோ  சமுத்திரத்திலோ  கலந்து  உப்பு  நீராவதில்லை . குட்டை  குளங்களை  நிரப்பிக்கொண்டு  அந்த  எல்லையிலேயே  இருப்பது . அப்பேற்பட்ட  வைகை  கரையில்  உள்ள  ஒரு  இடம்  திருவாதவூர் . அங்கு  ஒரு  அந்தணர்  குலத்தில்  பிறந்தவர்  வாதவூரர்  அவர் தந்தை  யாக   யக்ஞங்களை  முறையோடு  செய்பவர் . சிறந்த  பிராம்மணர் . வாதவூரர்  சிறு  வயது  முதலே  ஈசனிடம்  சிறந்த  பக்தி  உடையவர் . ஆனால்  மற்ற  சடங்குகளில்  ஈடுபாடு  இல்லாமல்  இருந்தார் . ஆனாலும்  எல்லாவற்றையும்  படித்து  அறிந்து  கொள்ளும்  ஆர்வமுடன்  பல  நூல்களை  படித்து  ஆராய்ந்து  கொண்டிருந்தார் .

No comments:

Post a Comment