Friday, 19 June 2015

manivasagar

9 ம்  நூற்றாண்டில் வாழ்ந்தவர்  மாணிக்கவாசகர் . வைகை  கரையிலுள்ள  வாதவூர்  இவர்  பிறந்த  இடம் . இவர்  இயற்பெயர்  வாதவூரர் . இவர்  63 நாயன்மார்களின்  வரிசையில்  இடம்  பெறவில்லை . சுந்தரரால்  திருத்தொண்டர்  தொகையில்  பாடப்பெற்றவர்களே  63 நாயன்மார்களில்  அடங்குவர் . இவர்  சுந்தரர்  வாழ்ந்த  காலத்திற்கு  பின்பு  இருந்தவர் . ஆனால்  சைவசமயத்தையும்  பக்தி  நெறியையும்  நிலைநாட்ட  அவதரித்த  சமயகுரவர்  நால்வரில் இவரும்   ஒருவராவார்.  மற்ற  மூவர்  அப்பர்  சம்பந்தர்  மற்றும்  சுந்தரர்  ஆவர் . அப்போது  பௌத்த , சமண  மதங்கள்  மன்னர்கள்  ஆதரவுடன்  தங்கள்  சமயத்தை  பரப்பினர் . யாக  யஞைகளையும்  நிந்தித்தனர் . அவர்களை   வாதில்  வென்று  சைவ சமயத்தை  நிலை நாட்ட   அவதரித்தவர்கள்  இந்நால்வரும் .
''வேத  வேள்வியை  நிந்தனை  செய்துழல்   ஆதமில்லி யமனொடு  தேரரை
 வாதில்  வென்றழிக்க  திருவுள்ளமே  பாதி  மாதுடனாய  பரமனே
 ஞாலமே  நின்புகழே  மிக  வேண்டுந்தென்  ஆலவாயிலுறையும்  எம்மாதியே |
இவ்வாறு  ஞானசம்பந்த  மூர்த்தி  பாடுகிறார் .
  •  

No comments:

Post a Comment