9 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர் . வைகை கரையிலுள்ள வாதவூர் இவர் பிறந்த இடம் . இவர் இயற்பெயர் வாதவூரர் . இவர் 63 நாயன்மார்களின் வரிசையில் இடம் பெறவில்லை . சுந்தரரால் திருத்தொண்டர் தொகையில் பாடப்பெற்றவர்களே 63 நாயன்மார்களில் அடங்குவர் . இவர் சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின்பு இருந்தவர் . ஆனால் சைவசமயத்தையும் பக்தி நெறியையும் நிலைநாட்ட அவதரித்த சமயகுரவர் நால்வரில் இவரும் ஒருவராவார். மற்ற மூவர் அப்பர் சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆவர் . அப்போது பௌத்த , சமண மதங்கள் மன்னர்கள் ஆதரவுடன் தங்கள் சமயத்தை பரப்பினர் . யாக யஞைகளையும் நிந்தித்தனர் . அவர்களை வாதில் வென்று சைவ சமயத்தை நிலை நாட்ட அவதரித்தவர்கள் இந்நால்வரும் .
''வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமனொடு தேரரை
வாதில் வென்றழிக்க திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே
ஞாலமே நின்புகழே மிக வேண்டுந்தென் ஆலவாயிலுறையும் எம்மாதியே |
இவ்வாறு ஞானசம்பந்த மூர்த்தி பாடுகிறார் .
''வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமனொடு தேரரை
வாதில் வென்றழிக்க திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே
ஞாலமே நின்புகழே மிக வேண்டுந்தென் ஆலவாயிலுறையும் எம்மாதியே |
இவ்வாறு ஞானசம்பந்த மூர்த்தி பாடுகிறார் .
No comments:
Post a Comment