Saturday, 2 May 2015

viranmindar

சுந்தரரை  பேசும்போது   இன்னும்  இரண்டு  நாயன்மார்களை  சொல்ல  வேண்டியது  அவசியம் . ஒன்று   விரன்மிண்ட  நாயனார் . சேர  நாட்டில்  இன்று  திருச்செங்கோடு  என்று  அழைக்கப்படும்  இடத்தில்  பிறந்தவர்  விரன்மிண்டர் . அவர்  சிறந்த  சிவபக்தர்  . சிவன்  அடியார்களை   மிகவும்  பக்தியுடன்  போற்றுபவர் . அவர்  பல  சிவ  தல ங்களை  சேவித்து  விட்டு  திருவாரூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  சிவடியார்கள்  எல்லோரும்  சேர்ந்து  ஒரு  கூடத்தில்  சிவ  த்யானத்தில்  இருந்தனர் . அப்போது  சுந்தரர்  இவர்கள்  யாரையும்  கவனியாமல்  நேராக  ஈசன்  சன்னதிக்கு  சென்றார் . சிவனடியார்களை  வணங்காமல்  சென்ற  சுந்தரரை  கண்டு  மிக  கோபம்    கொண்ட  விரன்மிண்டர்   சுந்தரரையும்  அவரை  ஏற்று  கொண்ட  ஈசனையும்  கடுமையாக  ஏசுகிறார் . அதிர்ச்சி  அடைந்த  சுந்தரர்  ஈசனிடம்  மிக  வருத்தத்துடன்  முறையிடுகிறார் . ஈசன்  சுந்தரரை  சமாதானம்  செய்து  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  சிவனடியார்கள்  பெருமையை   பாடும்படி  ஆணை  இடுகிறார் . சுந்தரரும்  அவ்வாறே  ஆரம்பித்து  சிவத்தொண்டர்கள்  பெருமையை பாடுகிறார் . அதுவே  ''திருத்தொண்டர்  தொகை '' என்று  பெருமை  பெறுகிறது . அவர்  பாடும்போது  உள்ளே  நுழைந்த  விறன்மிண்டர் ''விரிபொழில்  சூழ்  குன்றையார்  விரன்மிண்டற்கு  அடியேன் '' என்ற  வரிகளை  கேட்டு  மெய்  சிலிர்த்து  சுந்தரர்  காலடியில்  வீழ்கிறார் . மன்னிப்பும்  கேட்கிறார் . அவரும்  சுந்தரர்  தோழறாகிறார் . இவ்வாறு  விறன்மிண்டர்  இந்த  பொக்கிஷம்  நமக்கு  கிடைக்க  ஒரு  மறைமுக  காரணமாகிறார் .
  

No comments:

Post a Comment