Tuesday, 19 May 2015

thirupungur

வையகமுற்றும்  மாமழை  மறந்து  வயலில்  நீரிலை  மாநிலந்தருகோம் ,
உய்யக்கொள்க  மற்றெங்களை  என்ன  ஒலி கொள் ,வெண்முகிலாய்  பரந்தெங்கும்
பெய்யுமாமழை  பெருவெள்ளம்  தவிர்த்து  பெயர்த்தும்  பன்னிரு  வெலிகொண்டருளூம்

செ ய்கை  கண்டு நின்  திருவடி  அடைந்தேன்  செழும்  பொழில்  திருபுன்கூர்  உளானே |
   சுந்தரர்  தன்  தல  யாத்திரையில்  ஒரு  முறை  திருப்புன்கூர்  வருகிறார் . அப்போது  அங்கு  மழை  இல்லாமல்  ஊர்  வறண்டு  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளாயிருந்தனர் . சுந்தரரை  மக்கள் 
சரணடைந்தனர் . சுந்தரர்  அவர்களை  திருப்புன்கூர்  ஈசனுக்கு  12 வேலி  நிலம்  வழங்க  கேட்டுகொண்டார் . அவர்களும்  சம்மதித்தனர் .சுந்தரர்  பாட  மழை  பொழிந்தது . ஆனால்  மழை  நீடித்து  வெள்ளம்  பெருக  மக்கள்   மறுபடி  சுந்தரரை  அணுகினர் . மேலும்  12 வேலி  நிலம்  ஈசனுக்கு  வழங்க  கோரிக்கை  வைத்தார் . மக்களும்  சம்மதிக்க  பதிகம்  பாடி  மழை  நிறுத்தினார் .சுந்தரர்  பாடி பெறுவது யாவும்  ஈசனுக்காகவே . 

No comments:

Post a Comment