இனி சுந்தரரின் பாடல்களை நோக்குவோம் . முதல் பாடல் ஈசனே அடியெடுத்து கொடுத்து பாட வைக்கிறார் . முதியவராக தோன்றி சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி அவரை ஆட்கொள்ள வந்த ஈசனை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் சுந்தரர் அவரை பித்தா ,பேயா என்றெல்லாம் ஏசுகிறார் . அவரை ஆட்கொண்ட ஈசன் ,சுந்தரரை பாட சொல்ல சுந்தரர் என்ன பாடுவது என்று தெரியாமல் விழித்தபோது ஐயனே 'பித்தா' என்று அடியெடுத்து கொடுத்து பாட சொல்கிறார் . திருவெண்ணை நல்லூரில் பாடும் அப்பாடல் அவருடைய முதல் பாடலாகும் .
No comments:
Post a Comment