இருவரும் சொல்லொணா வருத்தத்தில் ஆழ்ந்தனர் . சுந்தரர் மீது அவர்களுக்கு ஏற்பட்ட ஆத்திரம் தணிவதாக இல்லை . ஈசன் இவர்களுக்கு சுந்தரரின் உண்மை பக்தியை உணர்த்த முற்பட்டார் . ஏயர்கோன் கலிக்கமருக்கு கடும் சூலை நோயை கொடுத்து அவர் கனவில் அந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க இயலும் என்று உரைக்கிறார் . ஆனால் கலி காமனார் சுந்தரரால் குணமாவதை விட தன்னை மாய்த்து கொள்வதே மேல் என்று எண்ணி கத்தியால் தன்னை தானே மாய்த்துகொள்கிறார் . ஈசன் சுந்தரரை அவரை குணப்படுத்த சொல்லி அனுப்ப சுந்தரரும் அவ்வாறே செல்கிறார் .
No comments:
Post a Comment