Saturday, 29 December 2018

காழிப்பிள்ளை   தன்   புனித   பயணத்தை   தொடர்ந்து   செங்காட்டங்குடி   வந்து   அங்கு   சிலகாலம்   தங்கி   இருந்தார் .  அங்கிருந்தபோது   அருகில்   திருமருகல்   எனும்   இடத்தில்   ஈசனை   தரிசிக்க   சென்றார் .   ஒரு   நாள்   இரவு   பக்கத்திலுள்ள   மடத்திலிருந்து   ஒரு   பெண்ணின்   பரிதாபமான   அழும்   குரல்   கேட்டு   பதறிப்போய்   சம்பந்தர்   வெளியே   வந்து    அப்பெண்ணிடம்   சென்று   பார்த்தார் .   பாம்பு   கடித்து   மாண்டு   போன   ஒரு      இளைஞன்   உடலின்   மீது   புரண்டு  கதறி   அழும்   பெண்ணை   கண்டார் .  அவர்  மனம்   பாகாய்   உருகியது .  அப்பெண்ணை   அணுகி   அவள்   கதறலுக்கு   காரணம்   கேட்டார் .   அழுதுக்கொண்டே   அப்பெண்   தன்   கதையை   கூறினாள் .

No comments:

Post a Comment