காழிப்பிள்ளை தன் புனித பயணத்தை தொடர்ந்து செங்காட்டங்குடி வந்து அங்கு சிலகாலம் தங்கி இருந்தார் . அங்கிருந்தபோது அருகில் திருமருகல் எனும் இடத்தில் ஈசனை தரிசிக்க சென்றார் . ஒரு நாள் இரவு பக்கத்திலுள்ள மடத்திலிருந்து ஒரு பெண்ணின் பரிதாபமான அழும் குரல் கேட்டு பதறிப்போய் சம்பந்தர் வெளியே வந்து அப்பெண்ணிடம் சென்று பார்த்தார் . பாம்பு கடித்து மாண்டு போன ஒரு இளைஞன் உடலின் மீது புரண்டு கதறி அழும் பெண்ணை கண்டார் . அவர் மனம் பாகாய் உருகியது . அப்பெண்ணை அணுகி அவள் கதறலுக்கு காரணம் கேட்டார் . அழுதுக்கொண்டே அப்பெண் தன் கதையை கூறினாள் .
No comments:
Post a Comment