ஈசனின் லீலை . மனைவி தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவர் அங்கேயே படுத்து உறங்கி விட்டார் . அவர் கனவில் ஐயன் தோன்றி 'நமிநந்தி ஆரூரில் பிறந்த அனைவரும் நம் கணங்கள் என்பதை எவ்வாறு மறந்தாய் ? நாளை ஆரூரில் அதை காண்பாய் ' என்று சொல்லி மறைந்தார் . தன் தவறை உணர்ந்த அடிகளார் பிராயச்சித்தத்தை மறந்து காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மனைவியுடன் திருவாரூர் கிளம்பி சென்றார் . அங்கு நடமாடும் அத்தனை பேரும் சிவஸ்வரூபமாக காட்சி அளித்தனர் . ஒரு கணம் அக்காட்சியால் மெயசிலிர்த்து ஆரூர் வீதியில் விழுந்து வணங்கினார் . அவர் எழுந்தபோது அக்காட்சி மறைந்து எல்லோரும் சாதாரண மனிதர்களாக மாறி இருந்தனர் . இறைவனின் திருவருளை எண்ணி பரவசமடைந்து தன் அறியாமையை குறித்து வெட்கித்து தன் பிழையை பொருத்தருளுமாறு ஈசனை மனமாற பிரார்த்தித்தார் . அதன் பிறகு ஆரூரையே இருப்பிடமாக கொண்டு தன் தெய்வீக சேவையை விடாது நடத்தி ஈசன் அடி சேர்ந்தார் . அப்பர் பெருமான் இவர் சேவையை போற்றி இருக்கிறார்
No comments:
Post a Comment