Sunday, 30 September 2018

ஈசனின்   லீலை .  மனைவி   தண்ணீர்   எடுத்து   வருவதற்குள்   அவர்   அங்கேயே   படுத்து   உறங்கி   விட்டார் .   அவர்   கனவில்   ஐயன்   தோன்றி   'நமிநந்தி   ஆரூரில்   பிறந்த   அனைவரும்   நம்   கணங்கள்   என்பதை   எவ்வாறு   மறந்தாய் ?  நாளை        ஆரூரில்   அதை   காண்பாய் '  என்று   சொல்லி   மறைந்தார் .    தன்   தவறை   உணர்ந்த   அடிகளார்   பிராயச்சித்தத்தை   மறந்து   காலையில்        எழுந்து   ஸ்நானம்   செய்து   மனைவியுடன்   திருவாரூர்     கிளம்பி   சென்றார் .  அங்கு   நடமாடும்   அத்தனை   பேரும்   சிவஸ்வரூபமாக   காட்சி  அளித்தனர் .  ஒரு   கணம்   அக்காட்சியால்   மெயசிலிர்த்து    ஆரூர்  வீதியில்   விழுந்து   வணங்கினார் .  அவர்   எழுந்தபோது   அக்காட்சி   மறைந்து   எல்லோரும்   சாதாரண   மனிதர்களாக   மாறி   இருந்தனர் .   இறைவனின்   திருவருளை   எண்ணி   பரவசமடைந்து   தன்   அறியாமையை   குறித்து   வெட்கித்து   தன்   பிழையை   பொருத்தருளுமாறு      ஈசனை   மனமாற   பிரார்த்தித்தார் .  அதன்   பிறகு   ஆரூரையே   இருப்பிடமாக   கொண்டு   தன்   தெய்வீக   சேவையை   விடாது  நடத்தி   ஈசன்   அடி   சேர்ந்தார் .  அப்பர்   பெருமான்   இவர்   சேவையை   போற்றி   இருக்கிறார் 

No comments:

Post a Comment