Friday, 7 September 2018

ஈசன்   நீலநக்கர்   கனவில்   இவ்வாறு   இவர்   மனைவி   பெருமையை   எடுத்து   கூறி   மறைந்தார் .   திடுக்கிட்டு   எழுந்த   நீலநக்கர்   தம்  மனைவி   பெருமையை   உணர்ந்தார் .  ஆறு  காலமும்   விடாமல்   தாம்   செய்யும்   பூஜையைவிட    தாய் பாசத்தோடு   தம்   மனைவி   செய்த   அச்சேவை   உயர்வாக  மதித்த   ஈசனின்   அன்பு   உள்ளத்தை   கண்டு   நெகிழ்ந்து   போனார் .  உடனே   மனைவியை   காண   துடித்தார் .  பொழுது   விடிந்ததும்   மனைவியை   காண   கோவிலுக்கு    சென்று   கனவில்   ஐயன்   தோன்றி   கூறியதை   மனைவியிடம்   சொல்லி   மகிழ்ந்து   அவளை    வீட்டிற்கு   மகிழ்ச்சியுடன்   அழைத்து   சென்றார் .

No comments:

Post a Comment