Wednesday, 5 September 2018

இவ்வாறு   அன்னியோன்னியமாக   தம்பதிகள்   வாழ்ந்து   வந்தனர் .  ஒரு  நாள்   மாலை   இருவரும்   அய்யவந்திநாதரை   சேவிக்க   ஆலயம்   சென்றனர் .  நிலநக்கர்   எம்பெருமானை   மலர்களால்   அர்ச்சித்து   பிறகு   எதிரில்   அமர்ந்து   பஞ்சாக்ஷரம்   ஜபிக்கலானார் .  மனைவி   பக்கத்தில்   நின்று   கொண்டு   எம்பெருமானை   சேவிக்கலானார் .  அப்போது  கர்பகிருகத்தின்   மேல்   சுவரிலிருந்து   சிலந்தி   ஒன்று   லிங்கத்திருமேனி   மீது   விழுந்து   அங்கும்   இங்கும்   ஓடலாயிற்று .  அதை   கவனித்த   அம்மையார்   ஒரு   தாய்க்கு   உரிய   கவலையுடன்   பக்கத்தில்   சென்று   வாயால்   ஊதி   சிலந்தியை   விரட்டினார் .  அதை   கவனித்த   நிலநக்கர்   மிக்க   கோபம்   கொண்டவராய்   ஐயன்   மேனியில்   எச்சில்   படும்படியாக   ஊதியதை    சகிக்கமாட்டாமல்   என்ன   காரியம்   செய்தாய்   இவ்வாறு   ஐயன்   திருமேனியை   அசுத்தம்   செய்ததை   பொறுக்க   முடியாது .  இனி   என்   முன்  நிற்காதே   போய்விடு.  இனி   உனக்கு   என்  வீட்டில்   இடமில்லை . என்று   கோபத்துடன்   கூறிவிட்டு   அவர்  வீட்டிற்கு   சென்று   விட்டார் .

No comments:

Post a Comment