கணவனின் கோபத்தை கண்டு மிரண்டு அம்மையார் வீடு செல்லவில்லை . அவர் சொல்லை மீறி வீடு செல்ல அந்த கற்புக்கரசியின் மனம் இடம் தரவில்லை . இறைவனிடம் முறை இடுவது தவிர வேறு வழி தெரியவில்லை . "இறைவா இது என்ன சோதனை? நான் ஒரு தவறும் செய்யவில்லையே . என் குழந்தையாக பாவிக்கும் உன் மீது அந்த சிலந்தி விழுந்ததை என்னால் தாங்க முடியாமல் அன்றோ அவ்வாறு செய்தேன். எனக்கு ஏன் இப்பெரும் தண்ட னை ?" என்று புலம்பி கொண்டு ஆலயத்திலேயே தங்கிவிட்டாள் . வீடு சென்ற நிலநக்கருக்கு மனம் அலை பாய்ந்தது . ஊண் உறக்கமின்றி தவித்தார் . தன் மனைவி இவ்வாறு ஐயனை எச்சிலால் அசுத்தம் செய்து விட்டாளே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது . பட்டினி கிடந்தார் . அவர் தூக்கத்தில் அய்யாவந்திநாதர் அப்பனே என்று கூப்பிட்டார் . மானும் மழுவும் தாங்கி நின்ற ஐயனை கண்ட நீலநக்கர் திடுக்கிட்டார் . அவர் உடலெங்கும் கொப்புளங்கள் . ஈசன் அப்பனே பார் . உடலெங்கும் கொப்புளங்கள் . உன் மனைவி அன்பு மிகுதியால் ஊதி சிலந்தியை விரட்டியதால் என் நெற்றி மட்டும் சிலந்திக்கு தப்பியது என்றார் .
No comments:
Post a Comment