Thursday, 27 September 2018

அன்று  முதல்   நமிநந்தி   அடிகள்      தினமும்   ஆலயம்   முழுவதும்  நீரில்   விளக்கேற்றி   மகிழ்ந்தார் .  அவர்   பெருமையை   மக்கள்   வெகுவாக   புகழ்ந்து    அவரை   வணங்கினர்  இவ்வாறு    இருக்கையில்     தண்டியடிகள்    என்பவரின்   பெரும்   முயற்சியால்   ஆரூரிலிருந்து   சமணர்கள்   விரட்டப்பட்டனர் .  சைவர்கள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   ஆரூர்   ஈசனை   வழிப்பட்டனர் .    அடிகளும்   தம்   தெய்வத்தொண்டுகளை   குறைவின்றி   செய்து   வந்தார் .  இவரை  பற்றி   கேள்விப்பட்ட    சோழ  மன்னனும்   அடிகளை   தியாகராஜர்   திருக்கோயில்   திருப்பணிகள்   எல்லாம்   செய்ய   தலைமை   தாங்கி   நடத்தும்   பொறுப்பை   ஏற்க்க   செய்தார்     .  அவரும்   அப்பொறுப்புகளை   பக்தியுடன்   ஏற்று   குறைவின்றி   நடத்தி   வந்தார் .

No comments:

Post a Comment