Thursday, 4 October 2018

வம்பறாவரிவண்டு   மணம்   நாற   மலரும்   
மதுமலர்நற்   கொன்றையான்அடியலாற்   பேணா
எம்பெருமான்   சம்பந்தன்   அடியார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சீர்காழி   என்றொரு   புண்ணியத்தலம் .  பிரம்மபுரம் ,  கழுமலம் ,  வேணுபுரம் ,  தோணிபுரம்   இன்னும்   பல   பெயர்கள்   இக்ஷேத்திரத்திற்கு .  பிரளய   காலத்தில்   அண்ட    சராசரங் ள் வெள்ளத்தில்   மூழ்கி   அழிந்த   போது   இத்தலம்   தோணியாக   மாறி   ப்ரளயத்திலிருந்து   மீண்டதால்   தோணிபுரம்   என்று   பெயர்   பெற்றது .   இதுவே   இந்திரன்   தாரகாசுரனுக்கு   பயந்து   ஒளிந்து   கொண்ட    இடமாகும் .   இத்தனை   பெருமை   வாய்ந்த  தலத்தில்   கவுணியர்   கோத்திரத்தில்    பிறந்த     சிவபாதவிருதயர்   என்ற   அந்தணர்   வாழ்ந்து    வந்தார் .

No comments:

Post a Comment