Friday, 21 September 2018

அருநம்பி   நமிநந்தி   அடியார்க்கும்   அடியேன் |

சோழ  நாட்டில்     திருவாரூருக்கு   அருகே ஏமப்பேறு   என்றொரு   தலம்.  அங்கு   நமிநந்தி   அடிகள்   என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   அவ்வூரில்   குடிகொண்டிருக்கும்   புற்றிடம்   கொண்ட   பெருமானிடம்   மிக்க   பக்தி   கொண்டவர் .  சிறந்த   சிவபக்தர் .   தினமும்  விடியற்காலை    எழுந்து   நீராடி   பூஜை   முடிந்ததும்   திருவாரூருக்கு   சென்று    ஆலயத்தில்   காலை   முதல்  மாலைவரை  இருந்து   எம்பெருமானை   வணங்கிவிட்டு   திருத்தொண்டுகள்   புரிவார்.  மாலை   அபிஷேகம்   முடிந்ததும்தான்   வீடு   திரும்புவார் .  இவ்வாறு    நாள்தோறும்   தொண்டு   செய்து   வந்தார் .

No comments:

Post a Comment