ஒரு நாள் திருவாரூரில் மாலை வீதிவிடங்கர் ஆலயத்தை சுற்றி வரும்போது சில சந்நிதிகளில் விளக்கு எரியாமல் இருந்தது. அது கண்ட நமிநந்தி அடிகள் விளக்கேற்ற நினைத்தார் . எண்ணெய் தேடி பக்கத்திலுள்ள வீட்டிற்கு சென்று விளக்கேற்ற எண்ணெய் கேட்டார் . அது சமணர் வாழும் வீடு . சிவபெருமான் ஆலயத்திற்கு தீபமேற்ற எண்ணெய் கேட்டது மிக கோபத்தை உண்டாக்கியது . ஏளனமாக கையில் அனலேந்தும் ஈசன் அவர் ஆலயத்திற்கு தீபம் ஏற்ற நீர் போதுமே என்று பரிகாசமாக வினவினர். மிக்க வேதனையும் அவமானமும் அடைந்து ஆலயம் திரும்பி மன உளைச்சலுடன் இருந்தார் நமிநந்தியடிகள் . பக்தனின் மன வருத்தம் கண்டு பொறுக்காத ஈசன் அவருக்கு குளத்து நீரை ஊற்றி விளக்கேற்றுமாறு அசரீரியாக அறிவுறுத்தினார் . மகிழ்ச்சி அடைந்த நம்நந்திகள் ஒரு செம்பில் நீர் எடுத்து வந்து விளக்கேற்ற விளக்கு பிரகாசமாக எரிவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து கோயில் முழுவதும் தண்ணீர் விளக்கேற்றி பெரும் ஆனந்தம் அடைந்தார் .
No comments:
Post a Comment