Tuesday, 25 September 2018

ஒரு   நாள்   திருவாரூரில்   மாலை   வீதிவிடங்கர்   ஆலயத்தை   சுற்றி   வரும்போது   சில   சந்நிதிகளில்   விளக்கு   எரியாமல்   இருந்தது.  அது   கண்ட   நமிநந்தி   அடிகள்   விளக்கேற்ற   நினைத்தார் .  எண்ணெய்   தேடி   பக்கத்திலுள்ள   வீட்டிற்கு   சென்று   விளக்கேற்ற   எண்ணெய்   கேட்டார் .  அது   சமணர்     வாழும்   வீடு .  சிவபெருமான்   ஆலயத்திற்கு   தீபமேற்ற   எண்ணெய்   கேட்டது   மிக   கோபத்தை   உண்டாக்கியது .   ஏளனமாக   கையில்   அனலேந்தும்   ஈசன் அவர்   ஆலயத்திற்கு   தீபம்   ஏற்ற   நீர்   போதுமே   என்று  பரிகாசமாக    வினவினர்.  மிக்க   வேதனையும்   அவமானமும்   அடைந்து   ஆலயம்   திரும்பி  மன   உளைச்சலுடன்   இருந்தார் நமிநந்தியடிகள்  .  பக்தனின்   மன வருத்தம்    கண்டு   பொறுக்காத   ஈசன்   அவருக்கு   குளத்து   நீரை   ஊற்றி   விளக்கேற்றுமாறு   அசரீரியாக   அறிவுறுத்தினார் .  மகிழ்ச்சி   அடைந்த   நம்நந்திகள்   ஒரு   செம்பில்   நீர்   எடுத்து   வந்து   விளக்கேற்ற   விளக்கு   பிரகாசமாக   எரிவது   கண்டு   மட்டற்ற   மகிழ்ச்சி   அடைந்து   கோயில்   முழுவதும்   தண்ணீர்   விளக்கேற்றி   பெரும்   ஆனந்தம்   அடைந்தார் .

No comments:

Post a Comment