Monday, 10 September 2018

தம்பதிகள்   தொடர்ந்து   தங்கள்   தெய்வீக   பணிகளை   செய்து   கொண்டு   மகிழ்ச்சியாக    இல்ல.றம்   நடத்தி     கொண்டிருந்தனர் .  அப்போது   ஞானசம்பந்தர்     தொண்டர்களுடன்   அங்கு   எழுந்தருளினார் .   தம்பதிகள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவர்களை         உபசரித்து   அமுது   செய்வித்து   மகிழ்ந்தனர் .   நீலநக்கர்   அவர்களை   இரவு   தங்கிவிட்டு   மறுநாள்   செல்லும்படி   கேட்டுக்கொண்டார் .  சம்பந்தபெருமான்    நிலநக்கர்   பெருமையை   நிறைய   கேள்விப்பட்டிருந்தார் .   ஆதலால்   அவர்   பெருமையை   மேலும்   எடுத்துக்காட்ட   எண்ணம்   கொண்டார் .  ஆகையால்   அவர்   என்னைப்பற்றி  கவலை   வேண்டாம் .  என்னுடன்   அடியார்   ஒருவர்   வந்துள்ளார்.  நீலகண்ட   பெரும்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   என்னுடன்   வந்துள்ளனர் .  அவர்களுக்கு   இரவு   தங்க   இடம்   கொடுங்கள்   என்று   கேட்டுக்கொண்டார் .    நீலநக்கர்   மகிழ்ச்சியோடு   அவ்விருவரையும்   சுடர்விட்டெரியும்   குண்டத்து   அருகிலேயே     அவர்கள்   படுக்க   இடமளித்தார்     கு  ண்டத்தில்   எரிந்த   தீ   அவர்கள்   நெருங்கியதும்   ஒதுங்கி   வலம்வந்து   எரிந்தது .    கூடி   எல்லோரும்   நீலகண்டர்     தாழ்ந்த  வகுப்பில்    பிறந்தவரானாலும்   தான்   வணங்கும்   இறைவனுக்கு    சமமாக   பாவித்த   நிலநக்கரை   வெகுவாக   கொண்டாடினார்கள் .

No comments:

Post a Comment