இவ்வாறு நமிநந்தி அடிகள் மனநிறைவோடு சேவை செய்து வருகையில் பங்குனி உத்திரம் மஹோத்சவ திருநாள் வந்தது . வீதிவிடங்கர் வீதி உலா சென்று மக்களை ஆனந்தமயமாக்கும் பெரு விழா. அன்று ஐயன் ஊர்வலம் மணலூர் வரை சென்று திரும்புவார் . அடிகளாரும் உடன் சென்று திரும்பினார் . எம்பெருமான் கோயில் திரும்பியதும் நமிநந்தி அடிகள் வீடு திருப்பினார் . திரும்பியவர் வீட்டில் நுழையாமல் புறக்கடை பக்கம் சென்று மனைவியை அழைத்தார் . அவளிடம் தான் ஐயனுடன் மணலூர் வரை சென்றதால் வழியில் பலர் மீது பட்டு தீட்டு ஏற்பட்டிருக்கும் . ஆகையால் பிராயச்சித்தம் செய்ய ஜலம் கொண்டு வரும்படி ஆணை இட்டார் . சிவன டியார்களில் பேதம் பார்ப்பதை விரும்பாத ஆரூர்ப்பெருமான் அடிகளுக்கு அதை உணர்த்த விரும்பினார்
No comments:
Post a Comment