Saturday, 29 September 2018

இவ்வாறு   நமிநந்தி   அடிகள்   மனநிறைவோடு   சேவை   செய்து   வருகையில்   பங்குனி   உத்திரம்   மஹோத்சவ   திருநாள்   வந்தது .  வீதிவிடங்கர்   வீதி   உலா   சென்று   மக்களை   ஆனந்தமயமாக்கும்   பெரு   விழா.  அன்று   ஐயன்   ஊர்வலம்   மணலூர்   வரை   சென்று   திரும்புவார் .  அடிகளாரும்   உடன்   சென்று   திரும்பினார் .    எம்பெருமான்   கோயில்   திரும்பியதும்   நமிநந்தி   அடிகள்   வீடு   திருப்பினார் .  திரும்பியவர்   வீட்டில்   நுழையாமல்   புறக்கடை   பக்கம்   சென்று   மனைவியை   அழைத்தார் .  அவளிடம்   தான்   ஐயனுடன்   மணலூர்  வரை   சென்றதால்   வழியில்   பலர்   மீது   பட்டு   தீட்டு   ஏற்பட்டிருக்கும் .   ஆகையால்   பிராயச்சித்தம்   செய்ய   ஜலம்   கொண்டு    வரும்படி   ஆணை   இட்டார் .      சிவன டியார்களில்   பேதம்   பார்ப்பதை   விரும்பாத   ஆரூர்ப்பெருமான்   அடிகளுக்கு   அதை   உணர்த்த   விரும்பினார் 

No comments:

Post a Comment