Friday, 20 July 2018

மஹாராணியாரும்   அரசனின்   இந்த   போக்கால்   மனமுடைந்து   போயிருந்தார் .  அந்த   சமயத்தில்   சம்பந்த   பெருமான்   சோழ   நாட்டு   திருப்பதிகள்   தோறும்   சென்று   சிவபெருமான்   மீது   பதிகங்கள்   பாடி   நாடு   தோறும்   சைவம்   தழைத்தோங்க   பெரும் பாடு   பட்டுக்கொண்டிருந்த   செய்தி   ராணியாரை   எட்டியது .  உடனே   அவர்   குலச்சிறையாரை   அனுப்பி   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   வரவழைத்து   எவ்வாராவது   சமணர்களை   வாதில்   வென்று   சைவத்தை   பாண்டிய   நாட்டில்   மறுபடி   ஸ்தாபிக்க   செய்ய   எண்ணி   அவரிடம்  அனுப்ப   எண்ணம்   கொண்டார் .  அவ்வாறே    குலச்சிறையாரும்    சம்பந்தரை   பணிந்து   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   அழைத்து   வந்து  சமண  குருமார்களை   எல்லா   வாதங்களிலும்   வென்று  மறுபடியும்  சைவம்  தழைக்க    செய்தார் .  சமணர்களை   கடுமையாக   தண்டிக்க  செய்து   நாட்டை   விட்டு   விரட்ட செய்தார் . மன்னனும்   தன்   தவறை   உணர்ந்து   பிராயச்சித்தமாக   பல   சிவாலயங்களை   கட்டினான்   குலச்சிறையார்   தொடர்ந்து   சைவத்திற்கு   பல   தொண்டுகள்  செய்து  கொண்டு   சில   காலம்   வாழ்ந்து   பிறகு   சிவனடி   சேர்ந்தார் .

No comments:

Post a Comment