Friday, 13 July 2018

அப்பர்பெருமான்   பாண்டிய   நாட்டு   தலங்களை   சேவித்து   பதிகங்கள் ,  தாண்டகங்கள்   பாடிக்கொண்டும்   உழவார   பணிகளை   செய்து கொண்டும்   சோழநாட்டு   தலங்களையும்   சேவித்து   மனமகிழ்ந்தார் .  திருப்புகலூர்   வந்தடைந்தார் . அங்கு   ஐயனை   மனதார   தொழுது   கொண்டும்  பதிகங்கள்  பாடிக்கொண்டும்   தன்   உழவார   பணியையும்   விடாமல்   செய்து   கொண்டும்   காலம்   கடத்திக்கொண்டு   இருந்தார் .  ஈசனுக்கு   அப்போது   அவருடைய   உள்ளத்தை   சோதிக்க   எண்ணம்   எழுந்தது .  அவர்   பணி   செய்யும்   இடங்களில்   எல்லாம்   முத்துக்கள் ,  மணிகள் ,  வைரம்   விலை   உயர்ந்த   பொருள்கள்   தோன்ற   செய்தார் .  பணியில்   ஈடுபட்டிருந்த   நாவுக்கரசர்     இவை   எதையும்   கவனித்ததாக   தெரியவில்லை.  எல்லாவற்றையும்   சுத்தம்  செய்து   குளத்தில்   எறிந்தார் .

No comments:

Post a Comment