அப்பர்பெருமான் பாண்டிய நாட்டு தலங்களை சேவித்து பதிகங்கள் , தாண்டகங்கள் பாடிக்கொண்டும் உழவார பணிகளை செய்து கொண்டும் சோழநாட்டு தலங்களையும் சேவித்து மனமகிழ்ந்தார் . திருப்புகலூர் வந்தடைந்தார் . அங்கு ஐயனை மனதார தொழுது கொண்டும் பதிகங்கள் பாடிக்கொண்டும் தன் உழவார பணியையும் விடாமல் செய்து கொண்டும் காலம் கடத்திக்கொண்டு இருந்தார் . ஈசனுக்கு அப்போது அவருடைய உள்ளத்தை சோதிக்க எண்ணம் எழுந்தது . அவர் பணி செய்யும் இடங்களில் எல்லாம் முத்துக்கள் , மணிகள் , வைரம் விலை உயர்ந்த பொருள்கள் தோன்ற செய்தார் . பணியில் ஈடுபட்டிருந்த நாவுக்கரசர் இவை எதையும் கவனித்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சுத்தம் செய்து குளத்தில் எறிந்தார் .
No comments:
Post a Comment