Tuesday, 24 July 2018

(பெருமிழலை குறும்பர்க்கும்   பேயார்க்கும்   அடியேன் )
  மிழலை   நாட்டிலே   பெருமிழலை   என்றொரு   ஊர் .  அங்கு   குறும்பர்   எனும்   பெரும்   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவனடியார்களிடம்   மிகுந்த   அன்பு   கொண்டிருந்தார் .  அவர்களுக்கு   எவ்வித   சேவைகளையும்   தயங்காது   செய்து   வந்தார் .   அவருக்கு   சுந்தரர்   மீது   அளவு   கடந்த   பக்தி .  அவரை   போற்றி   புகழ்வதில்   பேரானந்தம்   அடைந்தார் .  அவருக்கு   அட்டமா  சித்திகளும்   சித்தியாயின .   இவ்வாறு   இருக்கையில்   திருவஞ்சைக்களத்தில்   சுந்தரர்   மறுநாள்   கைலாசம்   செல்ல   இருப்பதை   தன்   ஞான   திருஷ்டியால்   உணர்ந்தார் .  சுந்தரர்   இல்லாத   இவ்வுலகில்   வாழ்வதை   அவர்   விரும்பவில்லை .  கண்   இழந்தவன்   போல்   வாழும்   வாழ்வை   விரும்பாமல்   அவருக்குமுன்   தான்   கைலாயம்   சென்று   விட   எண்ணினார் .    தன்   அபாரமான   யோக   சக்தியால்    தன்   உடல்கூட்டை   விட்டு   ஆன்மாவை   கைலாய   நாத.னின்   காலடியில்   சமர்ப்பித்தார்.அவரோடு  ஐக்கிய மானார் .

No comments:

Post a Comment