Thursday, 19 July 2018

[பெருநம்பி   குலச்சிறைதன்   அடியார்க்கு   அடியேன் ]

பாண்டிய   நாட்டிலே   மணமேல்குடி   என்றொரு   ஊர்.  அவ்வூரில்   பிறந்தவர்   குலச்சிறையார் .    அவர்   சிவபெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர் .  திருநீறு ,  ருத்திராக்ஷம்   அணிந்த   யாரை   கண்டாலும்   சிவனடியாராக   நினைத்து   உபசரித்து   திருவமுது   செய்வித்து   மகிழ்வார் .  இப்பெரும்   குணம்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   கவர்ந்தது .  மன்னன்   அவரை    அமைச்சராக   நியமித்து   கொண்டார் .   பாண்டிய   பட்டமகிஷி   மங்கையர்க்கரசியார்      சிவபக்தி   மிகுந்தவர் .  ஆதலால்   அவர்க்கு   குலச்சிறையார்   மீது   மிகுந்த   மரியாதை   உண்டாயிற்று .   சமணர்கள்   போதனையால்   மனம்  மாறிய   மன்னன்   நெடுமாறன்    சிவனை  மறந்து     சமண   மதத்தை   தழுவலானான் .  அதனால்   மனமுடைந்த    மந்திரியார்   அரசனை   அணுக   தைரியமில்லாமல்   மஹாராணியிடம்    தன்   ஆதங்கத்தை   தெரிவித்தார் .   

No comments:

Post a Comment