Sunday, 1 July 2018

ஈசன்   அப்பரின்   உறுதியை   கண்டு   மகிழ்ந்து     அவருக்கு   தோற்றமளித்து   'அன்பரே   பக்கத்திலுள்ள   குளத்தில்   மூழ்கி   திருவையாற்றில்   குளத்தில்   எழுந்திருங்கள் .  அங்கு   கைலை   காட்சியை   காண்பீ ர்கள்.'  என்று   கூறி   மறைந்தார் .  மெய்சிர்த்து   அப்பர்பெருமான்   அக்குளத்தில்   மூழ்கி   எழும் போது காவிரி   கரையில்   திருவையாற்றில்      ஐயாறப்பன்   கோயில்   குளத்தில்   எழுவதை   கண்டு   உள்ளம்   சிலிர்த்து    போனார் .  அதைவிட   அவர்  உடலில்   ஒருவித   காயமும்   இன்றி   தேய்ந்த   உறுப்புகளெல்லாம்   வளர்ந்து   பழைய   நிலையை   அடைந்த்திருப்பது   கண்டு   ஐயன்  கருணையை   நினைந்து   நெக்குருகி   போனார் .   'யாதும்   சுவடு   படாமல்    ஐயாறடைகின்ற   போது '' .  ஆலயத்தை   அடைந்து   ஐயனை  சேவிக்கும்போது   அவர்   கண்ட   காட்சி   அவரை   மெயசிலிர்க்க   வைத்தது .  பனி  மூடிய   கைலாய   சிகரம்   உச்சியில்   ஒரு  மணிமண்டபம் .  அதில்   உயர்ந்த   ஆசனத்தில்   ஈசன்   உமை   அன்னையுடன்   வீற்றிருக்கிறார்.  தேவர்கள்   சித்தர்கள்   கின்னரர்கள்   எல்லோரும்   வந்து    பணிந்து   போற்றுகிறார்கள் .  யோகிகள்  முனிவர்கள்  வந்து   போகிறார்கள் .  ஒரு   கணம்   இவ்வறிய   கைலாய   காட்சியை   கண்டு   மிக்க   ஆனந்தம்   எய்தி  '' மாதர்   பிறை   கண்ணியானை ''  என்ற   பதிகம்   பாடுகிறார் .

No comments:

Post a Comment