Tuesday, 10 July 2018

திருப்பூந்துருத்தியில்   அப்பரும்   சம்பந்தரும்   சேர்ந்து   இறைவனை   தொழுது    மகிழ்ந்தனர் . பிறகு   அப்பர்  சம்பந்தரிடம்  அவருடைய   பாண்டியநாட்டு     பயணத்தை   குறித்து   அறிந்து   கொள்ள   ஆவலை   தெரிவித்தார் .  சம்பந்தரும்   பாண்டிய   பட்டத்தரசி   மங்கையர்க்கரசி   அமைச்சர்   குலச்சிறையார்   அவர்களின்   வேண்டுகோளுக்கு   இணங்கி   மதுரை   சென்றதையும்   அங்கு அனல்   வாதம்   புனல்   வாதம்   என்று   எல்லா   வாதங்களிலும்  சமணர்களை   வென்றது ,  கூன்பாண்டியனின்   நோயை   குணமாக்கி   அவருடைய  கூனை   நிமிர்த்தி   அவரை  'நின்றசீர்நெடுமாறன் '  ஆக   மாற்றியதை   விரிவாக  கூற  .  அப்பர்  புளகாங்கிதம்   அடைந்தார் .  அரசன்   மனம்   மாறி   சமணர்களை   கடுமையாக    தண்டித்ததையும்  தானும்   முழுமையாக   சைவத்திற்கு   மாறி   எம்பிரானுக்கு   பல   ஆலயங்கள்   எழுப்ப   பேராவல்   கொண்டது  பற்றியும்   தெரிவித்தார் .  அப்பர்   இச்செய்திகளை   கேட்டு   பேரானந்தம்   அடைந்தார் .  சம்பந்தர்   அங்கிருந்து   சென்றதும்   அப்பரும்   சில   நாட்கள்   அங்கு   தங்கி   உழவார   பணி   செய்துவிட்டு   தன்  பயணத்தை   தொடர்ந்தார் .  திருநெல்வேலி ,  திருப்புகலூர்  போன்ற   இடங்களுக்கு   சென்றார் .

No comments:

Post a Comment