புனிதவதி வளர்ந்து யுவதி ஆனாள் . அழகு சிறந்த குணம், நல்ல அறிவு செல்வம் எல்லாம் ஒருங்கே அமைந்த அவளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமென்ற கவலை பெற்றோர்களுக்கு. அப்போது நாகப்பட்டினத்தில் நிதிபதி என்றொரு பெரும் வணிகர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு பரமதத்தன் என்றொரு பிள்ளை இருந்தார் . புனிதவாதியை பற்றி கேள்விப்பட்ட அவர் பிள்ளைக்கு அவளை மணமுடிக்க ஆவல்கொண்டு தனதத்தனை பெண் கேட்டு வந்தார். இருவருக்கும் சம்மதம் இருந்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வெகு விமரிசையாக திருமணம் நடந்தது . பெண்ணை பிரிந்திருக்க மனமில்லாமல் தனதத்தன் காரைக்காலிலேயே தனியாக ஒரு மாளிகையில் அவர்களை குடியமர்த்தினான் .
No comments:
Post a Comment