Monday, 30 July 2018

புனிதவதி   வளர்ந்து   யுவதி     ஆனாள் .  அழகு   சிறந்த   குணம்,  நல்ல அறிவு   செல்வம்   எல்லாம்   ஒருங்கே   அமைந்த   அவளுக்கு   நல்ல   வரன்   அமைய   வேண்டுமென்ற   கவலை   பெற்றோர்களுக்கு.  அப்போது   நாகப்பட்டினத்தில்   நிதிபதி   என்றொரு   பெரும்   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .     அவருக்கு   பரமதத்தன்   என்றொரு   பிள்ளை   இருந்தார் .  புனிதவாதியை   பற்றி   கேள்விப்பட்ட   அவர்   பிள்ளைக்கு   அவளை   மணமுடிக்க   ஆவல்கொண்டு   தனதத்தனை   பெண்   கேட்டு   வந்தார்.  இருவருக்கும்   சம்மதம்   இருந்ததால்   திருமணம்   நிச்சயிக்கப்பட்டு    வெகு   விமரிசையாக   திருமணம்   நடந்தது .  பெண்ணை   பிரிந்திருக்க   மனமில்லாமல்     தனதத்தன்   காரைக்காலிலேயே   தனியாக   ஒரு   மாளிகையில்    அவர்களை   குடியமர்த்தினான் .

No comments:

Post a Comment