உலக பற்றையெல்லாம் அடியோடு துறந்த அவர்க்கு இந்த பொன்னும் மணியும் எவ்வித சலனத்தையும் உண்டாக்க முடியவில்லை . விட்டாரா ஈசன் அவர் மனத்தூய்மையை சோதிக்க தேவலோக பெண்களை வர செய்து அவர்முன் கவர்ச்சியான உடைகளுடன் நடனமாட செய்தார் . அவர் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை . அவர்கள் அவரை நெருங்கி தொட முயன்றபோது அவர் கோபத்தோடு ஆரூர் ஈசன் குடிகொண்டிருக்கும் என் இதயத்தை உங்கள் அலங்கோலத்தால் அசைக்க முடியாது என்று கூறி 'பொய் மாயப் பெருங்கடலுள் ' எனும் பதிகம் பாடினார் . அம்மாதர்கள் வெட்கி தலை குனிந்து அவரை பணிந்து திரும்ப சென்றனர். நாவுக்கரசரின் இப்பூலோக வாழ்வு முடியும் காலம் நெருஙகியது.அவர் தி னமும் மனம் கசிந்து உருகி தன்னை ஏற்று கொள்ளும்படி வேண்டலானார் . ஐயனும் மனம் இரங்கினார் .சித்திரை மாதம் சதய நக்ஷத்திரம் அன்று ' 'உன்னடிக்கே வருகிறேன் ' எனும் பதிகம் பாடினார் . ஆடவல்லானும் மனமிரங்கி அவரை ஏற்றுக்கொண்டார் . அடிகளும் சிவத்தில் கலந்து ஐக்கியமானார் . நமசிவாய !
No comments:
Post a Comment