Saturday, 14 July 2018

உலக   பற்றையெல்லாம்   அடியோடு   துறந்த   அவர்க்கு  இந்த   பொன்னும்   மணியும்   எவ்வித   சலனத்தையும்    உண்டாக்க   முடியவில்லை .  விட்டாரா   ஈசன்   அவர்   மனத்தூய்மையை   சோதிக்க   தேவலோக   பெண்களை   வர   செய்து   அவர்முன்   கவர்ச்சியான   உடைகளுடன்   நடனமாட   செய்தார் .   அவர்   பெண்களை   ஏறெடுத்தும்   பார்க்கவில்லை .   அவர்கள்   அவரை   நெருங்கி   தொட   முயன்றபோது   அவர்   கோபத்தோடு   ஆரூர்   ஈசன்   குடிகொண்டிருக்கும்   என்   இதயத்தை   உங்கள்   அலங்கோலத்தால்   அசைக்க   முடியாது   என்று   கூறி   'பொய்  மாயப்   பெருங்கடலுள் '   எனும்   பதிகம்   பாடினார் .  அம்மாதர்கள்   வெட்கி   தலை   குனிந்து   அவரை   பணிந்து   திரும்ப   சென்றனர்.  நாவுக்கரசரின்   இப்பூலோக   வாழ்வு   முடியும்   காலம்   நெருஙகியது.அவர்  தி  னமும்  மனம்   கசிந்து  உருகி    தன்னை  ஏற்று   கொள்ளும்படி   வேண்டலானார் .  ஐயனும்   மனம்   இரங்கினார் .சித்திரை  மாதம்   சதய   நக்ஷத்திரம்   அன்று '  'உன்னடிக்கே  வருகிறேன் '  எனும்    பதிகம்   பாடினார்   .  ஆடவல்லானும்  மனமிரங்கி   அவரை   ஏற்றுக்கொண்டார் .  அடிகளும்   சிவத்தில்   கலந்து ஐக்கியமானார் .  நமசிவாய !

No comments:

Post a Comment