Saturday, 30 June 2018

அப்பருடைய   இந்த   கோலத்தை   கண்டு   மனம்   பொறாமல்   ஈசன்   ஒரு   முனிவர்   வடிவில்   அங்கு   தோன்றினார் .  அங்கு   ஒரு  குளத்தையும்   உண்டாக்கினார் .  அவர்   அப்பர்   இருக்குமிடம்   சென்று   அவரை   நோக்கி '    ' எங்கே   இத்தனை   கடுமையான   பாதையில்  இந்த   பரிதாபமான    கோலத்தில்   செல்கிறீர்கள் ?'  என்று   வினவினார் .  எம்பிரான்   உமை   அன்னையுடன்   அருட்காட்சி   அருளும்   கைலாயத்தை   நோக்கி   செல்கிறேன்   என்று   அப்பர்   பெருமையுடன்   பதிலுரைத்தார் .  முனிவர்   கலகல   என்று   நகைத்து   '  உம்மை   காண   பரிதாபமாக   இருக்கிறது .  கைலாயம்   செல்வது   சாதாரண   காரியமா ?  விண்ணவர்களுக்கும்   மிக  அரிதான   கைலாயத்தை   மானிடராக   காண   நினைப்பது   பேதைமை .  திரும்பி   சென்று   விடுங்கள் .  அதுதான்   உமக்கு  நல்லது   என்று   உரைத்தார் .   அப்பர்   முகம்   வாடியவராய்   இத்தனை  சிரமப்பட்டு   இத்தனை   தூரம்   வந்து  விட்டேன்.  அக்காட்சியை   காணாமல்   போவதாக   உத்தேசம்   இல்லை .  என்று   பிடிவாதமாக   உரைத்தார் .   அவர்   உறுதியை   கண்டு   ஈசன்   மகிழ்ந்து   மறைந்து   போனார் .     

No comments:

Post a Comment