அப்பருடைய இந்த கோலத்தை கண்டு மனம் பொறாமல் ஈசன் ஒரு முனிவர் வடிவில் அங்கு தோன்றினார் . அங்கு ஒரு குளத்தையும் உண்டாக்கினார் . அவர் அப்பர் இருக்குமிடம் சென்று அவரை நோக்கி ' ' எங்கே இத்தனை கடுமையான பாதையில் இந்த பரிதாபமான கோலத்தில் செல்கிறீர்கள் ?' என்று வினவினார் . எம்பிரான் உமை அன்னையுடன் அருட்காட்சி அருளும் கைலாயத்தை நோக்கி செல்கிறேன் என்று அப்பர் பெருமையுடன் பதிலுரைத்தார் . முனிவர் கலகல என்று நகைத்து ' உம்மை காண பரிதாபமாக இருக்கிறது . கைலாயம் செல்வது சாதாரண காரியமா ? விண்ணவர்களுக்கும் மிக அரிதான கைலாயத்தை மானிடராக காண நினைப்பது பேதைமை . திரும்பி சென்று விடுங்கள் . அதுதான் உமக்கு நல்லது என்று உரைத்தார் . அப்பர் முகம் வாடியவராய் இத்தனை சிரமப்பட்டு இத்தனை தூரம் வந்து விட்டேன். அக்காட்சியை காணாமல் போவதாக உத்தேசம் இல்லை . என்று பிடிவாதமாக உரைத்தார் . அவர் உறுதியை கண்டு ஈசன் மகிழ்ந்து மறைந்து போனார் .
No comments:
Post a Comment