Monday, 23 March 2015

thirvarur

சுந்தரர்   திருவாரூர்  அடைகிறார் . திருவாரூர்  த்யாகேசர்  கண்டு  வணங்கி  எழுகிறார் . அப்போதே  அவ்விருவருக்கும்  ஒரு  அசைக்கமுடியாத  பந்தம்  ஏற்படுகிறது . அவர்  சுந்தரருக்காக ஆற்றிய  பணிகள்  வியக்க  வைக்கும் . அப்படிப்பட்ட  தோழமை . அவரே  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு   அடியேன் ''  என்று  அடி  எடுத்து  கொடுத்து  சிறந்த  சிவ  பக்தர்கள்  அனைவரையும்  பாட  வைக்கிறார் . அதுவே  திருத்தொண்டர்  தொகை  என  புகழ்  பெற்றது . இவர்  பாடிய  சிவ  தொண்டர்களே  பிற்காலத்தில்  63 நாயன்மார்களாக  எல்லா  சிவாலயங்களிலும்  வீற்றுருக்கின்றனர் .இதுவே  சிறப்புமிக்க  சேக்கிழார்  பெருமானின்  பெரியபுராணம்  உருவாக  காரணமாக  இருந்தது . பெரியபுராணத்தில்  முதலிலும்  கடைசியிலும்  சுந்தரர்  இடம்  பெறுகிறார் . சுந்தரர்  இப்பதிகத்தில்  திருவாரூர்  பிறந்தார்கள்  எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் 

No comments:

Post a Comment