சுந்தரர் திருவாரூர் அடைகிறார் . திருவாரூர் த்யாகேசர் கண்டு வணங்கி எழுகிறார் . அப்போதே அவ்விருவருக்கும் ஒரு அசைக்கமுடியாத பந்தம் ஏற்படுகிறது . அவர் சுந்தரருக்காக ஆற்றிய பணிகள் வியக்க வைக்கும் . அப்படிப்பட்ட தோழமை . அவரே ''தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் '' என்று அடி எடுத்து கொடுத்து சிறந்த சிவ பக்தர்கள் அனைவரையும் பாட வைக்கிறார் . அதுவே திருத்தொண்டர் தொகை என புகழ் பெற்றது . இவர் பாடிய சிவ தொண்டர்களே பிற்காலத்தில் 63 நாயன்மார்களாக எல்லா சிவாலயங்களிலும் வீற்றுருக்கின்றனர் .இதுவே சிறப்புமிக்க சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம் உருவாக காரணமாக இருந்தது . பெரியபுராணத்தில் முதலிலும் கடைசியிலும் சுந்தரர் இடம் பெறுகிறார் . சுந்தரர் இப்பதிகத்தில் திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன் என்று பாடுகிறார்
No comments:
Post a Comment