Wednesday, 18 March 2015

cont.

சுந்தரருக்கு  வாக்களித்தபடி  ஈசன்  அவருக்கு  தன்னை  காட்டிகொண்ட  நிகழ்ச்சிகள்  பல .முதல்  முறையாக  சுந்தரர்  தன்னை  மறந்து  ஒரு பெண்ணை  மணக்க  முனைந்த  போது  முதியவராக  வந்து  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொண்டது  கண்டோம் . பிறகு  திருவதிகை  என்னும்  ஊரின்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகையில்  சுந்தரர்  தன தலை  மீது  யாரோ  பாதம்  வைப்பதை உணர்ந்து  வேறு  பக்கம்  தலை  வைத்து  படுக்கிறார் . அப்போதும்  அதே  போல்  தன்  தலைமேல்  பாதம்  வைப்பதை  கண்டு  வியப்படைகிறார் . அப்போது  ஈசன்  சுந்தரா , என்னை  தெரியவில்லையா ?   என்று  கேட்டு  மறைகிறார் .சுந்தரர்  ஈசன்  கருணையை  நினைத்து  நெ க்குருகுகிறார் . 

No comments:

Post a Comment