Friday, 27 March 2015

paravaiyar

கைலையில்  சுந்தரரை  கவர்ந்த  மங்கையரில்  ஒருவர்  திருவாரூரில்  பிறந்து  வாழ்கிறார்  .பரவையார்  என்பது  அவர்  பெயர் . அழகிலும்  மற்ற  கலைகளிலும்  தேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தி  உடையவர் . தினமும்  த்யாகேசர்  முன் பாடி  ஆடும்  பழக்கமுடையவர் . தியாகேசர்  அருளால்  அவர்கள்  சந்திக்க  நேர்கிறது . ஈசன்  திருவருளால்  அவர்கள்  திருமணம்  இனிதே  நடைபெருகிறது . சுந்தரர்  அழகும்  பக்தியும்   அவர் பாடிய  பாக்களும்  அவருக்கு பெரும்  மதிப்பை  எற்படுத்தி  இருந்தது . சில  பெரியவர்கள்  தங்கள்  பெண்களை  மணக்குமாறு  சுந்தரரை   வேண்டினர் . ஆனால்  சுந்தரர்  மறுமுறை  அத்தவறை  செய்வாரா ? அப்பெண்களை  தன்  மடியில்  இருத்தி  காதில்  மந்திரம்  ஓதி  தன்  மகளாக  ஏற்று   கொள்கிறார் . இவர்கள்  பற்றி  தன்  பாடலிலும்  குறிப்பிட்டிருக்கிறார் .  

No comments:

Post a Comment