முதியவர் கோபத்துடன் கடுமையாக பேசிய சுந்தரரையும் மற்ற பெரியோர்களையும் நோக்கி எனக்கு இந்த ஊரில் ஞாயம் கிடைக்காது . என் ஊரில் பெரியோர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடக்க சித்தமாக இருப்பதாக தெரிவித்தார் . அவர் ஊர் யாது என்று வினவ திருவெண்ணைநல்லூர் என பதில் உரைக்கிறார் . உடனே எல்லோரும் அங்கு விரைகின்றனர் . அங்கு தீர்ப்பு முதியவருக்கு சாதகமாக இருக்க வேறு வழியின்றி சுந்தரர் முதியவரை பின் தொடர்கிறார் . முதியவர் அவ்வூர் ஆலயத்தில் நுழைந்து மறைந்து விடுகிறார் .
No comments:
Post a Comment