Thursday, 12 March 2015

s.4

சுந்தரா  என்னை  நீ  உணரவில்லையா ? என்ற  குரலை  கேட்ட  சுந்தரர்  பிரமித்து  போய்  தன்  தவறை  உணர்கிறார் . வந்தது  ஈசன்  என்பதை  உண ர்கிறார் .தனக்கு  வார்த்தை  கொடுத்ததை  ஈசன்  மறவாமல்  தான்  செய்ய  இருந்த  பெரும்  பாவத்திலிருந்து  தன்னை  காத்த  ஈசனின்  அன்பை  வியந்து  நெகிழ்ந்து  பலவாறு  பிதற்றுகிறார் . ஈசன்  'என்னை  பாட  அல்லவோ  நீ  பிறந்தாய் ? பாடு ' என  கட்டளை  இடுகிறார் . என்ன  பாடுவேன்  என  தன அறியாமையை நினைந்து   நெக்குறுகி  வினவுகிறார் . ஈசன்  தன்னை  பித்தா  என்றெல்லாம்  ஈசினாயே  அதையே  பாடு  என்று  சொல்ல  ''பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா '' என்ற  பதிகம்  பாடுகிறார் .   

No comments:

Post a Comment