Friday, 6 March 2015

sundarar

இப்போது  நாம்  7 ஆம்  திருமுறையை  காண்போம் . இந்த  திருமுறை  சுந்தரமூர்த்தி  நாயனார்  அவர்களால்  பாடப்பெற்றது .
ஆலாலசுந்தரர்  கைலாயத்தில்  வாழ்ந்த  சிவதொண்டர் . ஒரு  நாள்  பூங்காவில்  தேவி  பார்வதியின்  இரு  தோழிகள்  மலர்  பறித்து  கொண்டிருப்பதை  கண்டு  அவர்கள்  மீது  மையல்  கொண்டார் . இதையறிந்த  ஈசன்  சுந்தரரை  பூலொகத்தில்  சில காலம்  இருந்து  அவ்விருவரையும்  மணந்து  சிகாலம்  வாழ்ந்து  பிறகு  கைலாயம்  திரும்ப  கட்டளை  இட்டார் . மனம்  வருந்திய  சுந்தரர்  பூலோகத்தில்  ஈசன்  திருவடியை  தான்  மறவாதிருக்க  அவ்வப்போது  தனக்கு  அவர்  திருவடியை  காட்ட  வேண்டும்  என்று  விண்ணப்பித்து  கொண்டார் . ஐயனும்  அவ்வாறே  ஆகட்டும்  என்று  வாக்களித்தார் . 

No comments:

Post a Comment