'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து ' என்ற வாசகத்தின்படி சுந்தரர் பசியால் வாடும்போது ஈசனே அவருக்கு பசியாற அன்னமிட்ட சம்பவங்களும் உண்டு . கேட்கவே மெய் சிலிர்க்கிறது அல்லவா? ஆனால் தவறு செய்தபோது தண்டிக்கவும் தவறவில்லை . அதை பிறகு பார்க்கலாம் . சுந்தரர் இரு பெண்களை கண்டு தடுமாறியதால் அவர் புவியில் பிறந்தார் என நினைப்பது தவறாகும் . அவருடைய பாக்கள் சைவத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே ஐயனின் இச்சை . அவர் பாடிய 'திரு தொண்டர் தொகை ' சைவத்திற்கே ஒரு பொக்கிஷம் . அவர் ஆலயங்களை வழிப்பட்டுகொண்டே தில்லையை அடைந்தார் . அங்கு அவர் தன நிலை மறந்து தொழுது கொண்டிருந்த போது சுந்தரா திருவாரூர் செல் என்ற கட்டளையை கேட்டு திருவாரூர் செல்கிறார்
No comments:
Post a Comment