Monday, 4 June 2018

நாவுக்கரசர்   சம்பந்தரை   பற்றிய   கவலையில்   மனசோர்வுடன்   திருமறைக்காட்டிலிருந்து  புறப்பட்டு   தல   யாத்திரையில்   திருநாகைக்காரோணம்   திருவீழிமழலை   முதலிய   இடங்களை   தரிசித்து   கொண்டு  திரு ஆவடுதுறையை   அடைந்து   சம்பந்தருக்கு   ஆயிரம்   பொன்    அளித்து   அருளிய  கருணையை   போற்றி   'மாயிருஞாலம்  எல்லாம் '  எனும்   பதிகம்   பாடி   ஐயனை   மகிழ்வித்தார் .  அங்கிருந்து   பழையாறை   சென்றார் .  அப்போது   அங்கு   சமணர்கள்   ஆதிக்கம்   ஓங்கி   இருந்தது .  அவர்களின்   சூழ்ச்சியால்  வடதளி   ஆலயத்தில்    ஐயனின்   லிங்க   திருமேனி   களவாடப்பட்டு   மறைத்து   வைக்கப்பட்டிருந்தது .  ஆதலால்   பூஜை   நிறுத்தப்பட்டிருந்தது .  மக்கள்   பெரும்   துக்கத்தில்   ஆழ்ந்திருந்தார்கள் .  நாவுக்கரசர்   வருகிறார்   எனும்   செய்தி   அவர்களுக்கு   பெரும்   மகிழ்ச்சியையும்   நம்பிக்கையையும்   அளித்தது .

No comments:

Post a Comment