நாவுக்கரசர் சம்பந்தரை பற்றிய கவலையில் மனசோர்வுடன் திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்டு தல யாத்திரையில் திருநாகைக்காரோணம் திருவீழிமழலை முதலிய இடங்களை தரிசித்து கொண்டு திரு ஆவடுதுறையை அடைந்து சம்பந்தருக்கு ஆயிரம் பொன் அளித்து அருளிய கருணையை போற்றி 'மாயிருஞாலம் எல்லாம் ' எனும் பதிகம் பாடி ஐயனை மகிழ்வித்தார் . அங்கிருந்து பழையாறை சென்றார் . அப்போது அங்கு சமணர்கள் ஆதிக்கம் ஓங்கி இருந்தது . அவர்களின் சூழ்ச்சியால் வடதளி ஆலயத்தில் ஐயனின் லிங்க திருமேனி களவாடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது . ஆதலால் பூஜை நிறுத்தப்பட்டிருந்தது . மக்கள் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள் . நாவுக்கரசர் வருகிறார் எனும் செய்தி அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது .
No comments:
Post a Comment