Tuesday, 12 June 2018

கரடுமுரடான   அப்பாதையில்   அப்பர்   நடந்து  மிக   களைத்து   போனார் .  ஆனாலும்   விடாது   தொடர்ந்து   நடக்கலானார் .  ஈசன்   பக்தனின்   இந்த   அவதியை   காண   பொறுப்பாரா?  உடனே   அப்பாதையில்      சிறு   சோலையையும்    ஒரு   தெளிந்த   நீர்   குளத்தையும்   அமைத்தார் .  பக்தனுக்காக   கட்டு   சோறையும்   கையில்   எடுத்துக்கொண்டு   அப்பர்   முன்   சென்று   உங்களை   பார்த்தால்   மிகவும்   களைத்துப்போய்   பசியுடன்    இருப்பதாக   தெரிகிறது .      .  அங்குள்ள   குளத்தில்   கை   கால்   சுத்தம்   செய்து   கொண்டு   வாருங்கள் .  என்னிடம்  உள்ள    அன்னத்தை   உண்டு   பசியாருங்கள்   என்று   அன்புடன்   அழைத்தார் .  நாவுக்கரசரும்   மகிழ்ச்சியுடன்   ஒப்புக்கொண்டார் .  இருவரும்   பேசிக்கொண்டே   சிறிது   நேரம் கழித்தனர் .  அப்பர்   திருப்பைஞிலி   செல்வதாக   கூறினார் .  தானும்   அவ்வழிதான்   செல்வதாக  கூறி   சேர்ந்தே   செல்லலாம்   என்று  கூறி   இருவரும்   நடந்தனர் .  கோயிலை   நெருங்கும்போது   திடீரென   அவர்   மறைந்தார்.  அவர்   ஆ லையத்துள்   சென்று   மறைந்தார் .  அப்போதுதான்   அப்பர்   தன்னுடன்   இததனை   நேரம்   இருந்தது   தன்   பசி   தாகம்   உணர்ந்து  தாயினும்   பரிவுடன்   தன்   பசியாற்றியது   ஈசனே   என்று   உணர்ந்து   மெயசிலிர்த்து   போனார் .  உள்ளம்   உருக   பாடி   தொழுதார் .    

No comments:

Post a Comment