கரடுமுரடான அப்பாதையில் அப்பர் நடந்து மிக களைத்து போனார் . ஆனாலும் விடாது தொடர்ந்து நடக்கலானார் . ஈசன் பக்தனின் இந்த அவதியை காண பொறுப்பாரா? உடனே அப்பாதையில் சிறு சோலையையும் ஒரு தெளிந்த நீர் குளத்தையும் அமைத்தார் . பக்தனுக்காக கட்டு சோறையும் கையில் எடுத்துக்கொண்டு அப்பர் முன் சென்று உங்களை பார்த்தால் மிகவும் களைத்துப்போய் பசியுடன் இருப்பதாக தெரிகிறது . . அங்குள்ள குளத்தில் கை கால் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள் . என்னிடம் உள்ள அன்னத்தை உண்டு பசியாருங்கள் என்று அன்புடன் அழைத்தார் . நாவுக்கரசரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் . இருவரும் பேசிக்கொண்டே சிறிது நேரம் கழித்தனர் . அப்பர் திருப்பைஞிலி செல்வதாக கூறினார் . தானும் அவ்வழிதான் செல்வதாக கூறி சேர்ந்தே செல்லலாம் என்று கூறி இருவரும் நடந்தனர் . கோயிலை நெருங்கும்போது திடீரென அவர் மறைந்தார். அவர் ஆ லையத்துள் சென்று மறைந்தார் . அப்போதுதான் அப்பர் தன்னுடன் இததனை நேரம் இருந்தது தன் பசி தாகம் உணர்ந்து தாயினும் பரிவுடன் தன் பசியாற்றியது ஈசனே என்று உணர்ந்து மெயசிலிர்த்து போனார் . உள்ளம் உருக பாடி தொழுதார் .
No comments:
Post a Comment