Sunday, 10 June 2018

சமணர்களிடமிருந்து   வடதளி   ஆலயத்தை   மீட்டு   அங்கு   எம்பெருமானுக்கு   வழிபாடுகள்   குறைவர   தொடங்கியதும்   மன   நிம்மதி   அடைந்த   அப்பர்   பெருமான்   தன்   தலயாத்திரையை   மீண்டும்   தொடர்ந்து   காவிரி   கரையோரம்   உள்ள   க்ஷேத்திரங்களை   சேவிக்க     யாத்திரையை   தொடர்ந்தார் .  ஒரு   சிலந்தியும்   யானையும்   ஐயன் மீதுள்ள    பக்தியால்   போட்டியில்   மடிய    அவ்விரு   ஜீவன்களுக்கும்   உயர்   பிறவி   அளித்த   ஜம்புகேஸ்வரர்   கோயில்  கொண்டிருக்கும்   திவானைக்காவலை   அடைந்து   அங்கு   துதித்து   மகிழ்ந்தார் .  தொடர்ந்து   திருச்சி ,      பராய்த்துறை   போன்ற   தலங்களை   சேவித்து   கொண்டு   பதிகங்கள்   பாடி   துதித்து   மன   நிறைவு    பெற்றார் .  பிறகு   காவிரியை   கடந்து   திருப்பைஞிலியை   நோக்கி   புறப்பட்டார் .   அப்பாதையில் தான்   அவர்   யாருக்கும்   அரிதான   அப்பெரும்பேரை   ஐயனிடமிருந்து   பெற்றார் .

No comments:

Post a Comment