Friday, 1 June 2018

அப்பர்பெருமான்   மனம்   நிறைவோடு   திருவாய்மூர்   ஐயனை   தரிசித்து   ஆனந்தம்   அடைந்தார் .  பிறகு   சம்பந்தரோடு   மடத்தில்   தங்கிவிட்டு   காலை   திருமறைகாடை   அடைந்தனர் .  அங்கிருக்கும்போது   மதுரையிலிருந்து   அரசி   மங்கையற்கரசியரும்   அமைச்சர்   குலச்சிறையாரும்   அனுப்பியதாக   தூதர்கள்   சம்பந்தரை   தேடி   வந்தனர் .  பாண்டிய  மன்னன்   சமணர்களுக்கு   அடிமையாக   இருப்பதால்   சைவர்கள்   பெரும்   துன்பம்   அடைவதால்   சம்பந்தர்   வந்து   சைவம்   மறுபடி   தழைக்க   செய்ய  வேண்டும்   என்று   அரசி   மிக   பணிவோடு   வேண்டி   கொள்வதாக    கேட்டுக்கொண்டனர் .  அப்பர்   சம ணர்களிடம்    தான்   அனுபவித்த   கொடும்   துன்பங்களை   கூறி   அங்கு   செல்ல   வேண்டாம்    என்று   சம்பந்தரிடம்   மன்றாடி   கேட்டுக்கொண்டார் .  ஆனால்   சம்பந்தர்   சைவர்களின்   துயர்   துடைப்பது   தமது   தலையாய   கடமை   என்று   கூறி   மிக   பணிவோடு   மறுத்துவிட்டார் .  அப்பர்  மனக்கவலையோடு   திருமறைக்காட்டை   விட்டு   கிளம்பி  தன்   தலயாத்திரையை   தொடர்ந்தார் .

No comments:

Post a Comment