Friday, 29 June 2018

கைலை   காட்சியை   காணும்   ஆவல்   மனமெல்லாம்   நிறைந்திருக்க   அவர்    கங்கை   நதியை   கடந்து   நடக்கலானார் .  காடு ,மேடு  பள்ளம்   கல்   முள்ளு   எதாலும்   அவர்   கவனத்தை   சிதற   அடிக்க   முடியவில்லை . வாயில்   பஞ்சாக்ஷரமும்   மனதில்   வேறு   சிந்தனையும்   இன்றி   இரவு   பகல்   பசி   தாகம்   எதுவும்   பாராமல்   நடந்தார் .  சில  காலம்   கிடைத்த   கனிகளை      உண்டார் . பிறகு   அதையும்   தவிர்த்தார் .  நடந்து   நடந்து   அவர்   பாதங்கள்   தேய்ந்து   உதிரம்   கொட்டியது.  அதற்குமேல்   நடக்க   இயலாமல்   கைகளை   ஊன்றி   தவழ   தொடங்கினார் .  முழங்காலும்   தேய்ந்து   பழுதாக   மார்பால்   தேய்த்து   நகர்ந்தார்   உருண்டார் .  உடல்   முழுவதும்   ரத்தவெள்ளமாக   ஆயிற்று .  ஆனாலும்   அவருடைய   உள்ளம்   தளர்ந்தார்   இல்லை .   

No comments:

Post a Comment