Monday, 18 June 2018

கிடைக்கப்பெறாத   இப்பேறை   பெற்ற   அப்பர்பெருமான்   திருப்பைஞிலி   பெருமானை   மனமுருக   தொழுது   பதிகங்கள்   பாடி  மகிழ்ந்தார்.  அங்கு   சில   நாட்கள்   உழவார   பணி   செய்து   பிறகு   தொண்டைநாட்டு   திருத்தலங்களை   சேவிக்க   புறப்பட்டார் .  அயனும்   மாலும்   அடிமுடி   காண   முடியாத   பெரும்   ஜோதியாக   நின்ற   எம்பெருமான்   கோயில்கொண்டிருக்கு   திருவண்ணாமலையை   சேவித்து   மகிழ்ந்தார் .  பிறகு   காஞ்சி   அடைந் தார் .  சமணர்களின்   போதனையால்   பல்லவ   மன்னனால்   பலவித   சித்திரவதைக்கு   ஆளாகி   அத்தனையிலிருந்தும்   ஈசனின்   பெரும்   கருணையால்   மீண்டுவந்த   அதிசயத்தை   கேள்விப்பட்டிருந்த   மக்கள்   அவரை   வரவேற்க   பெரும்   திரளாக   கூடி   இருந்தனர் .  அதை   கண்டு   அப்பர்   மெய்சிலிர்த்து   போனார் .  பதிகங்களும்   தாண்டகங்களும்   பாடி  ஈசனை   மகிழ்வித்து  பக்திக்கு   ஒரு   எடுத்துக்காட்டாக   திகழ்ந்த   அப்பெருமகனை   மக்கள்   ஆரவாரத்துடன்   எதிர்கொண்டு   வரவேற்றனர் .   அவரும்   ஏகாம்பரேஸ்வரரை   மனமுருக   பாடி   தொழுது   ஆனந்தம்   எய்தினார் .

No comments:

Post a Comment