Tuesday, 26 June 2018

அப்பர்பெருமான்   காளத்திநாதரை   சேவித்ததும்   அவர் மனதில்  எம்பெருமான்   கைலாயநாதராக   காட்சி   அளிக்கும்   கோலத்தை   காண   பெரும்   ஆவல்   எழுந்தது .  மனதில்   பொங்கி   எழுந்த   ஆவலை   அடக்கமுடியாதவராய்  உடனே   புறப்பட்டார் .   மனதில்   ஐயனின்   நினைவும்   உதடுகளில்   அவர்   நாமமுமாக   பல  மலைகள்   பல நதிகளை   கடந்து   வாரணாசி   வந்து   சேர்ந்தார் .  அங்கு   எம்பெருமானை   மனம்   குளிர   சேவித்துக்கொண்டு   தன்னுடன்   வந்தவர்களை     அங்கேயே   விட்டு   விட்டு   அவர்    கயிலையை   நோக்கி   புறப்பட்டார் .    கைலை   பயணமென்றால்    சாதாரணமா ?  அவர்   பட்ட   துன்பம்   எத்தனை   கல்   நெஞ்சங்களையும்   உருக   வைக்கும் .

No comments:

Post a Comment