Tuesday, 5 June 2018

வடதளி   ஆலயத்திற்கு   அப்பர்   வரப்போகிறார்   என்ற   செய்தி   கேட்டு   மக்கள்   பெரும்   நம்பிக்கையுடன்   இனி   தங்களுக்கு   நல்ல   காலம்   பிறக்கும்   என்று   பெரும்   ஆவலுடன்   அவருக்கு   பெரும்   வரவேற்பு   அளிக்க   ஏற்பாடு   செய்யலானார்கள் .   அப்பரும்   மக்களின்   இந்த  வரவேற்பை   மகிழ்ச்சியுடன்   ஏற்றார் .  மக்கள்   அங்குள்ள   நிலைமையை    கூறியதை    கேட்டு   மிக்க   அதிர்ச்சி   அடைந்த   நாவுக்கரசர்   அங்கு   சமணர்களால்   ஏற்பட்ட   இக்கொடுமையை   தீர்க்காமல்   அங்கிருந்து   நகருவதில்லை   என   உறுதி   பூண்டார் .  அவர்   ஆலயம்   சென்று   'ஐயனே   சமணர்களால்   இத்தகைய   பெரும்   துன்பத்திற்கு   ஆளாகி   உன்னை   தரிசிக்க   முடியாமல்   தவிக்கும்   அப்பாவி   மக்களை   நீ   இவ்விதம்   சோதிக்கலாமா ?   அவர்கள்   துயரை   தீர்க்கும்வரை   நான்   உணவு   அருந்த   மாட்டேன் .  இது   சத்தியம் '  என்று  கூறி   அங்கு   தங்கினார் .  மக்கள்  அவர்   உணவு   அருந்தாமல்   பட்டினி   கிடப்பதை   காண   சகியாமல்   தவித்தனர் .  இதற்கு   மேல்   ஐயன்   சோதிப்பாரா?   அன்றிரவு   ஈசன்   அரசனின்   கனவில்   தோன்றி   ' அரசனே   உன்கடமையை   மறந்து   சமணர்களால்   மக்கள்   படும்   துன்பத்தை   அறிந்தும்   கடமையை   செய்ய   தாமதம்   செய்யலாமா'  என்று   கூறி   தன்   திருமேனி   புதைத்து   வைக்கப்பட்ட   இடத்தையும்   அவருக்கு   காட்டிக்கொடுத்து   மறைந்தார் .  அரசன்   திடுக்கிட்டு   எழுந்து   தன்   தவறை   உணர்ந்து   உடனே     ஆலயத்திற்கு   சென்று   அப்பரை   வணங்கி   அவருடன்   ஈசன்   அடையாளம்   காட்டிய   இடத்திற்கு   சென்று   அத்திருமேனியை   மீட்டு   அப்பர்   அடிகளால்   மறுபடி   பிரதிஷ்டை   செய்வித்து   மகிழ்ந்தார்   மக்களும்   பெருமகிழ்ச்சி   அடைந்தனர் .  இதற்கு   காரணமான   சமணர்களும்   கடுமையாக   தண்டிக்கப்பட்டனர் .

No comments:

Post a Comment