Thursday, 31 May 2018

அப்பர்   மன  உறுத்தலுடன்   மடத்தின்  ஒரு   மூலையில்   படுத்து   உறங்கினார் .  பக்தனின்  மன   வருத்தத்தை   நீக்க   எண்ணிய   எம்பெருமான்   அவர்   கனவில்   தோன்றி   'அப்பரே   உமக்காக   காத்திருக்கிறேன் .  என்   பின்னே   தொடர்ந்து   திருவாய்மூர்   வாரும் .'  என்று   அழைத்தார் .  திடுக்கிட்டு   எழுந்த   நாவுக்கரசர்   வாயிலில்   இறைவன்   திருநீறு  பூசி     கழுத்தில்   மாலையுடன்   நிற்க   க  ண்டு   உள்ளம்   மகிழ்ச்சியில்   பொங்க   அவரை   தொடர்ந்தார் .  அவர்   வேகமாக   செல்ல   அவரை   பின்தொடர்ந்தார் .   அதற்குள்   சம்பந்தருக்கு   ஈசன்   சொல்படி  அப்பர் பெருமான்   திருவாய்மூர்   செல்வதை   அறிந்து   தன்   தொண்டர்களுடன்   அவரும்   சென்றார் .  அப்பர்   ஐயனை   பின்தொடர்ந்து   வேகமாக   சென்றும்   அவரால்    ஐயன்   வேகத்திற்கு   ஈடு   கொடுக்க   முடியவில்லை . ஈசன்   ஒரு   ஆலயத்தில்  சென்று   மறைந்தார் .      மனம்   வருந்தி   'எங்கே   என்னை   இருந்திடம்   தேடிக்கொண்டு '   பதிகத்தை   பாடினார் .  அப்போது   சம்பந்தரும்   தம்  அடியார்களுடன்   அங்கு    வந்தார்   . அவரை   கண்டதும்   அப்பர்   ஐயனே   மறைக்காட்டில்   உமது   சம்மதமின்றி   கதவை   திறந்து   விட்டேனா ?  இப்போது   கதவை   மூடிய   காழிப்பிள்ளையும்   வந்துள்ளார்   அவருக்காக   காட்சி   தர   கூடாதா'  என 'வேண்ட   ஈசன்   கதவை   திறந்து   இருவருக்கும்   காட்சி   அளித்தார் .  அப்போது   சம்பந்தர்   உங்கள்   வேண்டுகோளை   ஏற்று   ஐயன்   காட்சி   அளித்தார்   என்று   அப்பரை   கொண்டாடினார் .      

No comments:

Post a Comment