அப்பர் மன உறுத்தலுடன் மடத்தின் ஒரு மூலையில் படுத்து உறங்கினார் . பக்தனின் மன வருத்தத்தை நீக்க எண்ணிய எம்பெருமான் அவர் கனவில் தோன்றி 'அப்பரே உமக்காக காத்திருக்கிறேன் . என் பின்னே தொடர்ந்து திருவாய்மூர் வாரும் .' என்று அழைத்தார் . திடுக்கிட்டு எழுந்த நாவுக்கரசர் வாயிலில் இறைவன் திருநீறு பூசி கழுத்தில் மாலையுடன் நிற்க க ண்டு உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க அவரை தொடர்ந்தார் . அவர் வேகமாக செல்ல அவரை பின்தொடர்ந்தார் . அதற்குள் சம்பந்தருக்கு ஈசன் சொல்படி அப்பர் பெருமான் திருவாய்மூர் செல்வதை அறிந்து தன் தொண்டர்களுடன் அவரும் சென்றார் . அப்பர் ஐயனை பின்தொடர்ந்து வேகமாக சென்றும் அவரால் ஐயன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை . ஈசன் ஒரு ஆலயத்தில் சென்று மறைந்தார் . மனம் வருந்தி 'எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு ' பதிகத்தை பாடினார் . அப்போது சம்பந்தரும் தம் அடியார்களுடன் அங்கு வந்தார் . அவரை கண்டதும் அப்பர் ஐயனே மறைக்காட்டில் உமது சம்மதமின்றி கதவை திறந்து விட்டேனா ? இப்போது கதவை மூடிய காழிப்பிள்ளையும் வந்துள்ளார் அவருக்காக காட்சி தர கூடாதா' என 'வேண்ட ஈசன் கதவை திறந்து இருவருக்கும் காட்சி அளித்தார் . அப்போது சம்பந்தர் உங்கள் வேண்டுகோளை ஏற்று ஐயன் காட்சி அளித்தார் என்று அப்பரை கொண்டாடினார் .
No comments:
Post a Comment