Friday, 26 February 2016

ariurai

பிறப்பு  எனும்  விடியலும்  இறப்பு  இரவும்  மாறிமாறி  வருவது  இயற்கையின்  நியதி . பிறவிப்பிணிக்கு  ஒரே  மருந்து  பஞ்சாட்சிரமே . உடலை யும்  உள்ளத்தையும் பேணி  காத்து திருமூலரின்  உரைப்படி  நற்பண்புகளை  கடைப்பிடித்து  ஈசன்  பாதங்களே  சதமென்று   நம்புவோர்க்கு  இப்பிணியிலிருந்து  விடுதலை  நிச்சயம் . நாம்  சேர்க்கும்  செல்வம்  நமக்கு  துணை  வராது  நாடாளும்  மன்னன்  ஆனாலும்  பிச்சை  எடுப்பவன்  ஆனாலும்  ஒரே  நிலை தான் .செல்வமும்  அவ்வாறே  
நிலையற்றது . தேனீ  பூக்களை   அலைந்து  தேடி  சேகரித்து  வைக்கும் .ஆனால்  அந்த  தேன்  கூட்டை  சிதைத்து  அதை  உண்ணுபவர்  வேறு  எவரோ .நாம்  இவ்வுலகை  விட்டு  போகும்போது  நம்முடன்  அச்செல்வம்  வராது . நாம்  கடைபிடித்த  விரதங்களின்  பயன் , நாம்  செய்த  தான  தர்மங்கள்  மற்ற  ஜீவ  ராசிகளுக்கு  செய்த  புண்ணிய  காரியங்கள்  இவையே  நம்மை  தொடர்ந்து  வரும் . இளமையும்  அவ்வாறே  நிலை  அற்றது . ஆதலால்  இளமையும்  உடலில்  வலுவும்  உள்ளபோதே  புண்ணிய  காரியங்களை  செய்து  நற்கதிக்கு  வழி  தேடுங்கள் .

No comments:

Post a Comment