Monday, 8 February 2016

purushaartham

அறம் ,பொருள்  இன்பம் , வீடு  எனும்  நான்கு  புருஷார்த்தங்களை  கண்டோம் . வேத  ஆகமங்கள்  கூறும்  இக்கருத்தினை  திருமூலர்  வலியுறுத்துகிறார் . அறமே  முதல்  இடம்  பெறுகிறது .நம்  ஒவ்வொரு  செயலும்  ஒவ்வொரு  பருவத்திலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பின்  வரும்  பாடல்களில்  அறங்களை  திருமூலர்  விரிவாக  கூறுகிறார் . பொருள்  நமக்கு  அத்தியாவசியம் .நேர்மையான  பாதையில்  நமக்கு தேவையான  அளவு  பொருள்  ஈட்டுவது  தர்மம்  ஆகும் . இன்பமும்  அவ்வாறே  தர்மத்திற்கு  உட்பட்டும்  அதீதமான  ஈடுபாடு  வைக்காமலும்  அனுபவிப்பது  நன்று . வயது  ஆக ஆக  இந்த  சிற்றின்பகளை   அகற்றி  வீடு  அதாவது  இறைவன்  தாள்  அடைவதையே  முக்கிய  கருத்தாக  கொண்டு  மனதை  அவ்வழியில்  செலுத்த  வேண்டும் . அதை  ஔவையார்  இப்பாட்டில்  விளக்குகிறார் .
ஈதல்  அறம்  தீவினை  விட்டு ஈட்டல்  பொருள்  எஞ்ஞான்றும்
காதல்  இருவர்  கருத்து  ஒருமித்து ஆதரவு
பட்டதே  இன்பம் ,பரனை  நினைந்து
இம்மூன்றும்  விட்டதே  பேரின்ப  வீடு
     

No comments:

Post a Comment