Wednesday, 3 February 2016

திருமூலர்  ஆக்கையை  குறிப்பிடும்போது  அதன்  நிலையாமையையும்  குறிப்பிடுகிறார் . நம் உடல் , இளமை  அழகு , உடல் பலம் ,ஆரோக்கியம்  இவை  யாவுமே  நிலையானது  அல்ல  என்பதை  குறிப்பிடுகிறார் .  இது  நம்மை  அச்சப்படுத்துவதற்கு  அல்ல . நாம்  நற் பே றடைய  இந்த  உண்மையை  மனதிற்கொண்டு  செயல்பட  வேண்டிய  அவசியத்தை  தெளிவு  படுத்துகிறார் . மாயை  நிறைந்த  இவ்வுலகில்  நல்லவைகளை  தேர்ந்து  எடுத்து  அந்த  மார்கத்தில்  நாம்  செல்ல  நம்மை  அவர்  வழி  நடத்துகிறார் . வேத  ஆகமங்கள்  கூறுவதையே  இவர்  நமக்கு  எடுத்து  கூறுகிறார் .

No comments:

Post a Comment