Saturday, 20 February 2016

கொலை , களவுகள் ,காமம் ,பொய்கூறல்   மலையான  பாதகமாம்  அவை  நீக்கி  சிவனடி  சேருங்கள் ' என்று  அறிவுரை  கூறுகிறார் .புலால்  மது  இவை  உண்ணுதலை  வன்மையாக  கண்டிக்கிறார் . ஜீவ  ஹிந்சையே  கூடாது  என்கிறார் . பிறன் மனைவி  நாடாமை , ஏழ்மையை  எதிர்க்கும்  திறம்  இவையையும்  வலியுறுத்துகிறார்
ஆக்கை  நிலையாமையை  குறிப்பிடும்போது  உடல்  சாஸ்வதம்  என்று  எண்ணி  செயல் படும்   மாந்தர்களை அதன்    விளைவான  நரக  வேதனைகளை கூறுகிறார் .மீண்டும்  மீண்டும்  பிறப்பெடுக்க  வேண்டியதை  அறிவுறுத்துகிறார் . ஐம்புலன்களும்  நம்மை  ஆட்டுவிக்கும் . அண்டத்திலும்  அணுவிலும்  நிறைந்த  அப்பெருமானை  மன ஒருமைப்பாட்டுடன்  சதா நினைத்தல்  வேண்டும் .ஐம்புலன்களையும்  ஆமை  போல்  உளுக்குள்  இழுத்துக்கொண்டு  செயல்படல் , பெருமை  சிறுமை  ஒரே  போல்  ஏற்பது  இவைகளை  பழக்கத்திற்கு  கொண்டுவர  முயற்சித்தல்  அவசியம்  

No comments:

Post a Comment