Wednesday, 2 March 2016

வாழ்வின்  நிலையாமை  செல்வம்  நிலையாமை  இவற்றை   சொல்வதால்  இம்மானிட  பிறப்பை  குறையாக  மதிப்பிட   தேவை  இல்லை . கிடைப்பதற்கு  அரியது  மானிட  பிறவி .  விஷ்ணு வே   இப்புவியில்  ராமராகவும்  கிருஷ்ணராகவும்  அவதரித்துள்ளார் . சிவபெருமானும்  தன்  அடியார்களை  ரட்சிக்க  இப்புவியில்  பல  வேடங்களில்  தோன்றி  பல  பல  விளையாடல்கள்  புரிந்துள்ளார் . அநேக   சித்தர்கள்  பல  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்து  பல  சாதனைகள்  புரிந்துள்ளனர் . ஹனுமான்  இங்குதான்  ராமர்  இருப்பதால்  இவ்வுலகை  விட்டு  நீங்க  விரும்பாமல்  இவ்வுலகிலேயே  வாழ்ந்து  கொண்டிருப்பதாக  நம்பப்படுகிறது . இவ்வாறு  பெருமை  பெற்றது  இவ்வுலகம் .திருமூலர்  காட்டிய  நன்னெறிகளை  கடைப்பிடித்து  வாழ்ந்தால்  வாழ்க்கை  இன்பமே . 

No comments:

Post a Comment