Thursday, 18 February 2016

உள்ளம்  பெரும்  கோயில்  ஊனுடம்பாலயம் ,வள்ளல்  பிரானார்க்கு  வாய்  கோபுர  வாசல் ,
தெள்ள  தெளிந்தார்க்கு  சீவன்  சிவலிங்கம் , கள்ள  புலனைந்தும்  காண  மணிவிளக்கே |

 உடல்  நிலையாமையை  குறிப்பிட்ட  திருமூலர்  உடலை  இழிவாக  குறிப்பிடவில்லை . அதை  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . ஈசனின்  கொடையாக  கிடைத்த  இவ்வுடல்  போற்றுதலுக்கு  உரியது . இது  அவர்  கருத்து .ஒவ்வொரு  ஆன்மாவிலும்  ஈசன்  உறைந்திருக்கிறான்  என்பதை  உணர்ந்தால்
இம்மானிட  பிறப்பின்  மேன்மையை  அறிய  முடியும் .  திருமூலர்  காட்டிய  வழியில்  நடந்து  ஈசனில்  தம்மை  அர்ப்பணித்து  வாழ்பவர்களுக்கு  இவ்வுலகு  ஆனந்தமயம் . பக்தி  என்ற  நிலை  ஆனந்தம்  என்று  ஒரு கவிஞர்  குறிப்பிடுகிறார் . திருமுலர்  இவ்வுடலை  பேணி  காக்க  நிறைய  அறிவுரைகள்  வழங்கு கின்றார் . அன்பு ,ஈதல் , இன்சொல்  பக்தி  இவைகளால்  மனதை  அமைதியாக  வைத்துக்கொள்ளல்  அவசியம் . உடலுக்காக  யோகம் ,ஆசனம் ,பிராணாயாமம்  போன்ற  அநேக  பயிற்சிகளையும்  அவர்  எடுத்து  உரைக்கிறார் .

No comments:

Post a Comment