Thursday, 17 December 2015

thirumoolar cont.

விதி  தன்  விளையாட்டை  ஆரம்பிக்கிறது . சுந்தரநாதர்  கிராம  மக்களை  அழைத்துக்கொண்டு  தான்  தன்  உடலை  மறைத்து  வைத்த  இடத்தை  அடைகிறார் . பெரும்  அதிர்ச்சிக்கு  உள்ளாகிறார் . அங்கு  அவர்  மறைத்து  வைத்த  இடத்தில்  அவர்  உடலை  காணவில்லை . மனம்  நொந்து  ஈசனை  துதிக்கிறார் .   உலகுக்கு  தான்   செய்ய  வேண்டிய  கடமை  செய்ய  தனக்கு  அந்த  உடலின்  அவசியத்தை  எண்ணி  மலைக்கிறார் .  தன்  குருவான  அகத்தியரிடம்  ஆசி  பெற்று  சைவ  ஆகமங்களை  எளிய  தமிழில்  தொகுத்து  மக்களுக்கு  அளிக்க  வேண்டிய  தன்  கடைமையை  செய்ய  முடியாமல்  போய்விடுமோ  என்று  அஞ்சி  ஈசனை  மனமுருக  வேண்டுகிறார் . ஈசனும்  தானே  அவர்  உடலை  மறைத்ததாகவும்  மூலன்  தன்னை  அடைந்துவிட்டதாகவும்  கூறுகிறார் .  வயது , அறிவு  முதிர்ச்சியால்  பாமர  மக்களுக்கு  புரியும்  வகையில்  தமிழ்  மறையை  எழுத  மூலன்  உடலில்  இருந்துகொண்டு  எழுதுவதே  பொருந்தும்  என்று  தானே  அவ்வாறு  செய்ததாக  கூறூகிறார் அசரீரியாக.  அந்த  மக்கள் அதை  கேட்டு   மெய் சிலிர்த்து  அவரை  வணங்கி  வழி  அனுப்புகின்றனர் .  சுந்தரநாதர்  திருமூலர்  ஆகிறார் .

No comments:

Post a Comment