விதி தன் விளையாட்டை ஆரம்பிக்கிறது . சுந்தரநாதர் கிராம மக்களை அழைத்துக்கொண்டு தான் தன் உடலை மறைத்து வைத்த இடத்தை அடைகிறார் . பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார் . அங்கு அவர் மறைத்து வைத்த இடத்தில் அவர் உடலை காணவில்லை . மனம் நொந்து ஈசனை துதிக்கிறார் . உலகுக்கு தான் செய்ய வேண்டிய கடமை செய்ய தனக்கு அந்த உடலின் அவசியத்தை எண்ணி மலைக்கிறார் . தன் குருவான அகத்தியரிடம் ஆசி பெற்று சைவ ஆகமங்களை எளிய தமிழில் தொகுத்து மக்களுக்கு அளிக்க வேண்டிய தன் கடைமையை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி ஈசனை மனமுருக வேண்டுகிறார் . ஈசனும் தானே அவர் உடலை மறைத்ததாகவும் மூலன் தன்னை அடைந்துவிட்டதாகவும் கூறுகிறார் . வயது , அறிவு முதிர்ச்சியால் பாமர மக்களுக்கு புரியும் வகையில் தமிழ் மறையை எழுத மூலன் உடலில் இருந்துகொண்டு எழுதுவதே பொருந்தும் என்று தானே அவ்வாறு செய்ததாக கூறூகிறார் அசரீரியாக. அந்த மக்கள் அதை கேட்டு மெய் சிலிர்த்து அவரை வணங்கி வழி அனுப்புகின்றனர் . சுந்தரநாதர் திருமூலர் ஆகிறார் .
No comments:
Post a Comment