Friday, 4 December 2015

thirumoolan

ஒருநாள்  மூலன்  பசுக்களை  சுந்தரர்  தியானத்தில்  அமர்ந்திருந்த  மலை  அடிவாரத்தில்    மேய  விட்டிருந்தான் . அவன்  தியானத்தில்  அமர்ந்திருந்த  சித்தரை  கண்டு  அவர்  மீது  மிக்க  அனுதாபத்துடன்  அவரை  அணுகி  இங்கு  உணவு  ஒன்றும்  கிடைக்காது  பசியுடன்  இருப்பீர்கள்  என்று  தன்னுடைய  சாப்பாடை  எடுத்து  கொள்ளுமாறு  வற்புர்த்துகிறான் . அவர்  தன்போன்ற   சித்தர்களுக்கு  பசி  தாகம்  எதுவும்  கிடையாது  என்று  கூறியும்  மூலன்  நம்ப  மறுக்கிறான் . அவரும்  அவன்  அன்பான  கோரிக்கையை  மறுக்க  மனமில்லாமல்  அதை  பெற்றுக்கொள்கிறார் . இந்த  அன்புக்கு  பிரதியாக  தான்  ஏதாவது  செய்ய  விரும்புவதாக  கூறுகிறார் . ஆனால்  மூலன்  தான்  ஒரு  குறையும்  இல்லாமல்  சந்தோஷமாக  இருப்பதால்  தனக்கு  ஏதும்  தேவை  இல்லை  என்று  மறுக்கிறான் . அவரும்  தேவை  வரும்போது  தருவதாக கூறி  விடை  பெறுகிறார் . 

No comments:

Post a Comment